Hjem

நம்பிக்கைதான் காதல் - அரை நிமிடக்கதை! (அனைவரும் வாசிக்கவேண்டியது. :) ) நன்றி -tamil clone

ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக குடித்துவிட்டு அழுக்குப்படிந்த உடையுடன் வீட்டிற்கு வந்தான். கதவைத்திறந்தவன் மனைவி கோபகாம இருப்பதைப்பார்த்தவாறே தனது அறையினுள் போய் படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் காலை விடிந்தது.
கண்விளித்தவனுக்கு ஒரே ஆச்சரியம், அவன் வேலைக்குப்போவதற்காக உடைகள் அனைத்தும் அயன் பண்ணி வைக்கப்பட்டிருந்தன. அறை ஒதுக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு இருந்தது.
அவனருகில் தண்ணீர் கிளாஸ்ஸிற்கு அருகில் ஒரு நோட் பேப்பர் வைக்கப்பட்டிருந்தது.
அதில் " சாப்பாடு தயாராக இருக்கிறது, சாப்பிட்டு விட்டு போங்கள்... ஐ லவ் யு" என்று அவனது மனைவி எழுதியிருந்தாள்.
இவற்றைப்பார்த்து ஆச்சரியமாக தனது மகனைப்பார்த்துக்கேட்டா...
" இரவு என்ன நடந்தது? அம்மா கோபமாக இருந்திருப்பாங்களே" என்று...
மகன் சொன்னான்...
" இரவு, அம்மா அழுக்கான உங்களது உடைகளை கழற்ற முற்பட்டா... அப்போ நீங்க சொன்னிங்க..." நோ எனக்கு கல்யாணம் ஆகிட்டுது" என்று. :)

 

ஒஸ்லோவில் இலங்கை ஓவியர்களின் ஓவியக்கண்காட்சி‏

Kulturhistorisk museum Universitetet i Oslo (KHM) இலங்கையில் இருந்து "Don`t Measure Me” என்னும் தலைப்பிலான
ஒரு ஓவியக்கண்காட்சியினை Universitetet i Oslo, Frederiksgate 2, 0164 Oslo என்னுமிடத்தில் எதிர்வரும் பங்குனி மாதம் 23ம் திகதி வெள்ளிக்கி‌ழமை ஆரம்பித்து பல மாதங்களுக்கு கண்காட்சிக்கு வைக்கின்றது.

இக் கண்காட்சி இலங்கையைச் சேர்ந்த மோகன் டானியில் என்பவரது கலைக்கூடத்தின் ஒத்துழைப்பில் நடைபெறுகிறது. இதில் இலங்கையைச் சேர்ந்த பல ஓவியர்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். வேறு பல நாடுகளில் இக் கண்காட்சி நடைபெற்றுள்ளது.

Les mer …
 

சனிக்கிழமை(04.02.2012) அன்று 13:00 -14:30 வரை 1:30 மணித்தியாலத்திற்குட்பட்ட ஹிப்னாடிச விளக்கங்களும், செய்முறையும் காண்பிக்கப் படும் ,

அனுமதி : இலவசம்
இடம் : Veitvet senter , Veitvet veien 8 0596 Oslo

போரால் பாதிக்கப் பட்ட எமது மக்களுக்கு பல அதிர்ச்சிகளால்(Trauma) , பல விளைவுகள் வந்துள்ளன , அதே நேரத்தில் பல பிள்ளைகளுக்கு படிப்பில் நாட்டமின்மை , மறதி , குறைந்த பாடத்திட்டத்தை பயில்வித்தல் ,(Ekstra undervisning) போன்றன நடை பெறுகின்றது ..அதே நேரத்தில் சில பிள்ளைகள் சிறப்பாக படிக்கிறார்கள் , சிலர் மன அழுத்தத்துடன் அவதிப் படுகிறார்கள் , பலருக்கு நித்திரைப் பிரச்சனையும் ஒன்றாக இருக்கிறது..சில பெற்றோர் குடி , புகைத்தல் பழக்கத்தால் தாங்களும் அவ்திக்குள்ளகி குடும்பத்தையும் அவதிக்குள்ளாக்குகிறார்கள் ..

சிலபிள்ளைகளுக்கு படுக்கையில் சிறுநீர்களித்தல், திக்குவாய் , நிகம் கடித்தல் கை சூப்புதல் போன்றன பிரச்சனைகளாக உள்ளன

இவற்றை இலகுவாக ஹிப்னாடிசம் மூலம் சில மணித்தியாலங்களில் தீர்க்க முடியும் .

Les mer …
 

பார்க்க ரசிக்க

 

 

 

 

 

 

 

 

 

Les mer …
 

ஆடு சைவமா.? அசைவமா..?

ஆடு அசைவமா..?
நல்லா இருக்கே கதை..

சைவத்தை சாப்பிடறவங்க
சைவனா.. ஆடு மட்டும் என்ன
சிக்கன் வருவல், மீன் ரோஸ்ட்னா
சாப்பிடுது..??

அது பாட்டுக்கு இலை., தழை.,
புல்லுன்னு சைவ விஷயத்தை
தானே சாப்பிடுது..?!

இப்படி முழுக்க முழுக்க சைவத்தை
சாப்பிடற ஆட்டை " அசைவம்னு "
எப்படி சொல்லலாம்..?!!

Les mer …
 

சிறகுகள் வந்தால்

பறக்க நினைப்பதுபோல

சிலுவைகள் வந்தாலும்

சுமக்க நினையூங்கள்

அப்போதுதான்

மீண்டும் பறப்பதற்கு

சிறகுகுள் முளைக்கும்

அல்லது

ஓடுவதற்கு கால்களாவது

மிஞ்சும்

 

கடவுளுக்கே அடையாளம் தெரியவில்லை!

ஒரு 50 வயதுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒரு மயக்க நிலையில் கடவுளைக் கண்டாள்.

அவள் கேட்டாள்”கடவுளே! நான் சாகப் போகிறேனா?”

கடவுள் சொன்னார்.”இல்லை!உனக்கு இன்னும் 30 ஆண்டுகள் 6 மாதங்கள்இ18 நாட்கள் வாழ்க்கை இருக்கிறது.”

அறுவைச் சிகிச்சை நடந்து அவள் சுகமடைந்தாள்.

அவள் யோசித்தாள்”இன்னும்30 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிப்போம்”

Les mer …
 

சும்மா பொழுதுபோக்கிக்க செய்துபார்க்கலாம்

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...

மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம். முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...

தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க.

(உதாரணமாக... Murugan - 24 50 48 50 22 20 46) பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள். பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக. உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.

A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.

Les mer …
 

௦௦.௦௦.௦௦.௦௦ என்ன இது?

புத்தாண்டு கொண்டாடும் நேரம்.

2012ன் இன்னொரு சிறப்பென்ன தெரியுமா? இவ்வருடம். வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிறில் தொடங்குகிறது. திங்களில் முடிகிறது. சூரியனில் தொடங்கி, சந்திரனில் முடிகிறது பகல் இரவைப் போல.

 

why this kolaveri di தமிழில்.... முற்றிலும் தமிழில்..........

நான் பாடும் பாட்டு ..... நான் பாடும் பாட்டு
நல்ல பாட்டு
மொக்க பாட்டு


ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி


தாளம் சரியா


ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி

Les mer …
 

ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்துஇ “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான    பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது  சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார் 

Les mer …
 

சிரிக்க மட்டும்

ஒரு குருவி பயங்கர ஸ்பீட்ல பறந்து வந்துச்சு.

அப்ப எதிர்ல வந்த கார் மேல மோதிடுச்சு.

உடனே டிரைவர் அதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து

தண்ணி சாப்பாடு வெச்சு கூண்டுல அடைச்சார்.

மயக்கம் தெளிஞ்சு முழிச்சுப் பாத்த... குருவி என்ன சொல்லுச்சு தெரியுமா..?

‘ஐயையோ... நான் ஜெயில்ல இருக்கேன்...

அப்போ கார்காரன் செத்துட்டானா..?!’

Les mer …
 

படித்ததில்...........

நண்பர்களையும் உறவினர்களையும் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டுமா?...மிக அவசரம்என்று கடன்கேட்டுப் பாருங்களேன்!

------------------------------------

காதலித்துப்பார்!!!!! நீ அழகாக மாறுவது போல் உனக்கு மட்டுமே தெரியும்.. ...பிறகு நீ அசிங்கப்படுவது ஊருக்கே தெரியும்...

-------------------------------

புத்திசாலி தான் பெற்ற அறிவை சரியாகப் பயன்படுத்துபவன்.

அறிவாளி சந்தர்பத்தை சாதுர்யமாக கையாள்பவன்...

Les mer …
 

படித்ததில் பிடித்தது

ஒரு தந்தையின் கடிதம்...

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

Les mer …
 
<< Start < Forrige 1 2 3 4 5 6 7 8 9 10 Neste > Siste >>

Side 1 av 15